Skip to main content

திருச்சியில், 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

தமிழகம்:

திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் நடைபெற்றது.

ஒழுங்காற்று குழுவின் செயலாளர் நவீன்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர்.

தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது.

அப்போது, மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதிக்கக் கூடாது.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுவரை டெல்லி மற்றும் பெங்களூரில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்முறையாக இக்கூட்டம் தமிழகத்தில் நடைப்பெறுவது குறிப்பிடத்தக்கது.

Comments