அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துகள் ! -பிரதமர் டிவிட்டரில் பதிவு
இந்தியா :
டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
அதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார். பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார்.
டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
அதில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்தது. அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும், பிரதமர் மோடி கூறினார். பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.
அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டிருந்தார்.
Comments
Post a Comment