இந்தியா: தமிழகத்தில் அரசாங்கமே நடத்திவரும் 'டாஸ்மார்க்' கில் பண்டிகை தின வருமானமே பலநூறு கோடிகளை தாண்டி அகல பாதாளத்தில் தமிழர்களின் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழலில் அது மெல்ல கல்லூரி மாணவர்களை தாண்டி பள்ளி மாணவர்கள், பெண்கள் என தனது கோரக் கரங்களை நீட்டி வருகிறது. இந்தநிலையில் தான் கேரள பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மாணவ, மாணவியர் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, நீர் மணி (வாட்டர் பெல்) முறையை கொண்டு வந்து நாளொன்றுக்கு இரண்டல்லது மூன்று முறை மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தபட்ட பள்ளிகள் கூறும்போது, வீட்டிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீருடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பலர் இதை குடிப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன. எனவே, மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இதனை நடைமுறைபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சமூக ஊடகங்களின் வாய