Skip to main content

Posts

தேசிய விவசாயிகள் தினம்!

டிசம்பர் 23, (இன்று) தேசிய விவசாயிகள் தினம் ! முன்னாள் பிரதமர் சரண் சிங் பிறந்த நாளையே 2001 -ம் ஆண்டிலிருந்து விவசாயிகள் தினமாக கொண்டாடப் படுகிறது. சவுத்ரி சரண் சிங் ஜூலை 1979-ம் ஆண்டு, 5-வது பிரதமராக பதவியேற்றார். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்தார். 10-க்கு மேற்பட்ட பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி புரிந்து வந்திருந்தாலும், சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு காரணம் உண்டு. நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்ததோடு, 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். விவசாயிகளின் நலன்களுக்காக அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வை அறிமுகப்படுத்தியது விவசாயிகள் நலனில் முக்கிய அம்சங்களாகும். உத்தர பிரதேச மாநிலம், மீரட் மாவட்டம், நூர்பூர் என்ற ஊரில் நடுத்தர விவசாய குடும்பத்தில் பிறந்த சரண் சிங், எளிமையான விவசாயத்தை நேசிக்கக்கூடிய மனிதராகவே வாழ்ந்து வந்தவர். உத்தரபிரதேச அரசில் வேளா
Recent posts

பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா காங்கிரசை பழிக்கிறீர்கள்? குஷ்புவுக்கு பதிலடி!

துரோகிகள் வெளியேறுவதால் காங்கிரஸ் இயக்கம் நிச்சயம் வலிமை பெறும். குஷ்பு அவர்களே விமர்சனங்களை நிறுத்திக் கொள்ளுங்கள். விமர்சனங்கள் தொடர்ந்தால் உரிய பதிலடி கிடைக்கும் என்பதை எச்சரிக்கையாகக் கூற விரும்புகிறேன் எனத் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கட்சி மாறிய சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்த காங்கிரஸ் பேரியக்கம் மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியிருக்கிறார் குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் உண்மை தொண்டர்களின் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா? காங்கிரசில் இணைந்தபோது என்னென்ன மரியாதை எல்லாம் தரப்பட்டது நினைவிருக்கிறதா? அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் இணைந்தீர்கள். ஆனால், இன்று உங்கள் நிலைமை என்ன? இரண்டு நாட்களுக்கு முன்பு அத்தனை ஆரவாரத்தோடு பா.ஜ.க.வில் இணைய டெல்லி சென்ற உங்களை யார் வரவேற்றார்கள்? பத்தோடு பதினொன்றாக உங்களை இணைத்த கட்சிக்காகவா தொண்டர்களின் இயக்கமான காங்கிரசை பழிக்கிறீர்கள்? தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற உயரிய பொறுப்பை காங்கிரஸ

நடிகர் ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

சொத்து வரி செலுத்த மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிகாந்துக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி செலுத்தக்கூறி சென்னை மாநகராட்சி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (14/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறிய நீதிபதி ரஜினிகாந்த் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற ரஜினிகாந்த் தரப்பு பதில

குடிக்க சொல்லித் தரும் கேரள பள்ளிகள்!

இந்தியா: தமிழகத்தில் அரசாங்கமே நடத்திவரும் 'டாஸ்மார்க்' கில் பண்டிகை தின வருமானமே பலநூறு கோடிகளை தாண்டி அகல பாதாளத்தில் தமிழர்களின் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழலில் அது மெல்ல கல்லூரி மாணவர்களை தாண்டி பள்ளி மாணவர்கள், பெண்கள் என தனது கோரக் கரங்களை நீட்டி வருகிறது. இந்தநிலையில் தான் கேரள பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மாணவ, மாணவியர் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, நீர் மணி (வாட்டர் பெல்) முறையை கொண்டு வந்து நாளொன்றுக்கு இரண்டல்லது மூன்று முறை மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதுகுறித்து சம்பந்தபட்ட பள்ளிகள் கூறும்போது, வீட்டிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீருடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பலர் இதை குடிப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன. எனவே, மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இதனை நடைமுறைபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் சமூக ஊடகங்களின் வாய

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு, பதட்டத்தில் அயோத்தி!

இந்தியா: அயோத்தியில் பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து 40 நாட்கள் நடத்தி முடித்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம் தேதி ஓய்வு பெற இருப்பதால் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச காவல்துறை டிஜிபி ஓ.பி.சிங், எந்தச் சூழ்நிலையிலும் யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது எனக் கூறினார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காக, தேவைப்பட்டால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (NSA) அமல்படுத்தவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். இச்சட்டத்தின் படி முன்னெச்சரிக்கையாக ஒரு நபரைக் கைது செய்து 12 மாதங்கள் வரை சிறையில் அடைக்க முடியும். இதனிடையே கடவுள்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பக் கூடாது என அம்மாநில அரசு கண்டிப

'ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா' -ராஜஸ்தான் முதல்வர் எச்சரிக்கை!

இந்தியா, இந்தியா ஒரு கட்சி ஆட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது:-  "பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள், தாங்கள் ஜனநாயகத்தை நம்பாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்பதை உணரவேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டை அவர்கள் (பாஜக) வழிநடத்தி வருகின்றனர். சீனாவைப்போல ஒரு கட்சி ஆட்சியை நோக்கி இந்தியா வேகமாக சென்று கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.

திருச்சியில், 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற 19-வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்

தமிழகம்: திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 19-வது கூட்டம் நடைபெற்றது. ஒழுங்காற்று குழுவின் செயலாளர் நவீன்குமார், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உதவி இயக்குனர் ராம் பக்சிங், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில நீர்வள ஆதார அமைப்பின் தலைமை அதிகாரிகள் உட்பட 16 பேர் கலந்து கொண்டனர். தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீர், மழைப்பொழிவு, அணைகளில் நீர் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற்றது. அப்போது, மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை கருத்தில் கொள்ளக் கூடாது என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதிக்கக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டுமென விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுவரை டெல்லி மற்றும் பெங்களூரில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்முறையாக இக்கூட்டம் தமிழகத்தில் நடைப்பெறுவது குறிப்